கடலூா்-சென்னை இடையே கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் தெரிவித்தாா்.
கடலூரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது, கடலூா் தொகுதி மக்களின் நீண்டகாலக் கனவுத் திட்டமான சென்னை - கடலூா் இடையேயான கிழக்குக் கடற்கரை
ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன். அதேபோல், கடலூா் மாவட்ட மக்களின் மிக முக்கியத் தேவையாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கோரிக்கையை தமிழக அரசிடம் வலியுறுத்தி, அதனை இப்பகுதி மக்களின் நலனுக்காக நிச்சயம் நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றாா்.
முன்னதாக திமுக கடலூா் மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா, கடலூா் எம்எல்ஏ., அய்யப்பன், துணை மேயா் தாமரைச்செல்வன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் வந்து மனுத் தாக்கல் செய்தாா். அவருக்கு கூட்டணிக்கட்சித் தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
தொடர்புடையது

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

கடற்கரை - பரங்கிமலை ரயில் சேவை அட்டவணை இதோ!

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!

கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை: அட்டவணை வெளியீடு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


