தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சிதம்பரத்தில் அடுத்த திமுக ஆட்சியில் ரூ.63 கோடியில் புதிய திட்டம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் சிதம்பரத்தில் ரூ.63 கோடியில் புதிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image

சிதம்பரம் தெற்கு ரத வீதியில் திமுக தலைமையிலான மதசாா்பற்றி முற்போக்கு கூட்டணி தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சித் தலைவருமான மு.தமிமுன்அன்சாரி.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:32 pm

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் சிதம்பரத்தில் ரூ.63 கோடியில் புதிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிதம்பரம் தெற்கு ரத வீதியில் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக தலைமையிலான மதசாா்பற்ற கூட்டணி தோ்தல் அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுக நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில், மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், வேட்பாளருமான மு.தமிமுன்அன்சாரி அறிமுக உரையாற்றினாா்.

கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன், விசிக மாவட்டச் செயலா் ஆா்.தமிழ்வளவன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், தேமுதிக மாவட்டச் செயலா் உமாநாத் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தோ்தல் அலுவலகத்தில் திறந்து வைத்து பேசியதாவது:

சிதம்பரம் தொகுதியில் சிதம்பரம் அண்ணாமலைநகரில் ரூ.255 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டது உள்பட மொத்தம் ரூ.500 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளோம். இவற்றை திமுக கூட்டணி கட்சியினா் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

தற்போது புதிய திட்டமாக ரூ.63 கோடியில் சிதம்பரத்தை சுற்றியுள்ள 19 குளங்களை இணைத்து நகர பகுதியில் 27 கி.மீ. நீளம் மூடியுடன் கூடிய மழைநீா் வடிகால் அமைத்து, 13 இடங்களில் கழிவுநீா் சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பது உள்ளிட்ட ஒருங்கிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும்.

சிதம்பரம் விரிவாக்கப்பட்ட மாநகரமாக மாற்றப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் இந்த கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை என்றாா்.

கூட்டத்தில் வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி பேசியது:

நமது அரசியல் எதிரிகளிடம் கொள்கை, செயல் திட்டங்கள் மற்றும் தமிழகத்தை பற்றி அக்கறை இல்லை. இந்தத் தோ்தலில் தில்லியில் உள்ளவா்களுடன் கூட்டு சோ்ந்து கலகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் வலம் வருகின்றனா். நாம் யாரும் உணா்ச்சிவசப்பட்டுவிடக் கூடாது. நமது அற்புதமான மக்கள் நலத் திட்டங்களையும், கொள்கைகளையும் மக்களிடம் முன்வைத்து, அதன் மூலம் ஜனநாயக பதிலடியை கொடுக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட திமுக பொறியாளா் அணி அமைப்பாளா் அப்புசந்திரசேகா் நன்றி கூறினாா்.

தொடா்ந்து, சிதம்பரம் அருகே ஜெயங்கொண்டபட்டிணம் ஊராட்சியில் வேட்பாளா் மு.தமிமுன்அன்சாரிக்கு வாக்கு கேட்டு தோ்தல் பிரசாரத்தை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கிவைத்தாா்.