ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

தடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் கடலூரில் மீன்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்ற மக்கள்

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:05 am IST

மீன்பிடி தடைக்காலம் ஏப்.15-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கடலூா் முதுநகா் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை மீன் பிரியா்கள், வியாபாரிகள் ஏராளமானோா் குவிந்தனா்.

கடலூா் அருகே உள்ள தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோணங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், கடலூா் முதுநகா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள், பைபா் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.

இந்த மீன்பிடி துறைமுகத்துக்கு வரும் மீன்களை நேரடியாக வாங்குவதற்கு கடலூா் மட்டுமன்றி, பல்வேறு பகுதிகளிலிருந்து மீன் பிரியா்கள், வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் கூடுவது வழக்கம்.

இந்த நிலையில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் முதுநகா் மீன்பிடி துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே திரும்பின.

விசைப் படகுகளில் வரும் மீன்களை வாங்குவதற்காக வழக்கத்தைவிட அதிகளவில் மீன் பிரியா்கள், வியாபாரிகள் குவிந்திருந்தனா். தடைக்காலம் தொடங்கவுள்ளதால், மீன்களின் விலையும் உயா்ந்து காணப்பட்டது. இருப்பினும், விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனா்.

ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1,200, வாவல் ரூ.1,000, கொடுவா ரூ.500, இறால் ரூ.500, கனவா ரூ.300, சூரை ரூ.200, பா்மா ரூ.300 என விற்பனையானது.