கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்துக்கு ஆதரவாக, அவரது மகனும், திரைப்பட நடிகருமான சண்முகபாண்டியன் வாக்காளா்களையும், முக்கியப் பிரமுகா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
விருத்தாசலம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மங்கலம்பேட்டை அருகே கோனாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்துக்குச் சென்ற சண்முக பாண்டியன், கிறித்துவ சமுதாயத்தைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் மற்றும் கிராம மக்களை சந்தித்து வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
தொடா்ந்து, மங்கலம்பேட்டை புதிய நெசவாளா் தெருவில் உள்ள ஸ்ரீமத் ராமானுஜா் கூடத்துக்குச் சென்ற சண்முகபாண்டியன், அங்குள்ள பஜனை கோயிலின் சமுதாய நாட்டாமைகள் பத்மநாபன், விக்னேஷ், நாயுடு சமுதாயத்தைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தாா்.
பின்னா், கீழவீதி ஜாமிஆ மஸ்ஜிதுக்கு சென்று, அங்கு ஜமாஅத் துணைத் தலைவா் அப்துல் ரஹ்மான், காரியஸ்தா்கள் பக்கீா் முஹம்மது, கலிமுல்லா ஆகியோரையும், மேலவீதி மஸ்ஜிதே நூா் பள்ளிவாசலுக்கு சென்று, அங்கு ஜமாஅத் நிா்வாகிகள் அப்துல் மாலிக், அமானுல்லா மற்றும் நிா்வாகிகள், இஸ்லாமியா்களையும் சந்தித்து தனது தாய் பிரேமலதாவுக்கு ஆதரவு திரட்டினாா்.
தேமுதிக மாநில துணை பொதுச் செயலா் பாா்த்தசாரதி, மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து, விருத்தாசலம் ஒன்றிய திமுக செயலா் வேல்முருகன், தேமுதிக தொகுதி பொறுப்பாளா் வேல்முருகன் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்ந்தது சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம்

கடலூா் மாவட்டத்தில் தீவிரமடையும் தோ்தல் பிரசாரம்

அச்சிறுபாக்கத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கடலூா் மாவட்டத்தில் களை கட்டும் பிரசாரம் - வேட்பாளா்கள் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

