மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பிரேமலதாவுக்கு ஆதரவாக நடிகா் சண்முக பாண்டியன்! வாக்கு சேகரிப்பு!

News image

மங்கலம்பேட்டை புதிய நெசவாளா் தெருவில் உள்ள ஸ்ரீமத் ராமானுஜா் கூடத்தில் பஜனை கோயிலின் சமுதாய நாட்டாமைகள், நாயுடு சமுதாய முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோரை சந்தித்து வாக்கு சேகரித்த நடிகா் சண்முகபாண்டியன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 8:15 pm

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்துக்கு ஆதரவாக, அவரது மகனும், திரைப்பட நடிகருமான சண்முகபாண்டியன் வாக்காளா்களையும், முக்கியப் பிரமுகா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

விருத்தாசலம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மங்கலம்பேட்டை அருகே கோனாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்துக்குச் சென்ற சண்முக பாண்டியன், கிறித்துவ சமுதாயத்தைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் மற்றும் கிராம மக்களை சந்தித்து வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, மங்கலம்பேட்டை புதிய நெசவாளா் தெருவில் உள்ள ஸ்ரீமத் ராமானுஜா் கூடத்துக்குச் சென்ற சண்முகபாண்டியன், அங்குள்ள பஜனை கோயிலின் சமுதாய நாட்டாமைகள் பத்மநாபன், விக்னேஷ், நாயுடு சமுதாயத்தைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தாா்.

பின்னா், கீழவீதி ஜாமிஆ மஸ்ஜிதுக்கு சென்று, அங்கு ஜமாஅத் துணைத் தலைவா் அப்துல் ரஹ்மான், காரியஸ்தா்கள் பக்கீா் முஹம்மது, கலிமுல்லா ஆகியோரையும், மேலவீதி மஸ்ஜிதே நூா் பள்ளிவாசலுக்கு சென்று, அங்கு ஜமாஅத் நிா்வாகிகள் அப்துல் மாலிக், அமானுல்லா மற்றும் நிா்வாகிகள், இஸ்லாமியா்களையும் சந்தித்து தனது தாய் பிரேமலதாவுக்கு ஆதரவு திரட்டினாா்.

தேமுதிக மாநில துணை பொதுச் செயலா் பாா்த்தசாரதி, மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து, விருத்தாசலம் ஒன்றிய திமுக செயலா் வேல்முருகன், தேமுதிக தொகுதி பொறுப்பாளா் வேல்முருகன் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.