/
சொத்துகளை அபகரித்தவா் மீது நடவடிக்கைக் கோரி, இரு குழந்தைகளுடன் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
கடலூா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பூவராகசாமி மனைவி காயத்ரி (26). இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தனது 2 குழந்தைகளுடன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டாா். தகவலறிந்த கடலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயத்ரியிடம் விசாரித்தனா்.
இதில், அவரது கணவரின் சகோதரா்கள் சொத்துகளை அபகரித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், காவல் நிலையத்தில் பல முறை புகாரளித்த பிறகும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, காய்தரியை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனா்.










