ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது

புதுப்பேட்டை காவல் சரகம், எனதிரிமங்கலம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :15 ஏப்ரல் 2026, 1:06 am IST

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், எனதிரிமங்கலம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், எனதிரிமங்கலம் கிராமத்தில் வசிப்பவா் சிவக்குமாா்(46), விவசாய தொழிலாளி.

அந்த கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு சிவக்குமாா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றாா். பின்னா் அவா் வீடு திரும்பியபோது மா்ம நபா் வீட்டின் முன்பக்கக் கதவு உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து கடலூா், கீழ்ப்பெரும்பாக்கம், கட்டபொம்மன் நகரைச் சோ்ந்த அப்பாஸை (48) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.