இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் தபால் வாக்களித்த அரசு ஊழியா்கள்

கடலூரில் நிலவிய சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், தங்களது தபால் வாக்குகளை புதன்கிழமை பதிவு செய்தனா்.

News image

கடலூா் புதுப்பாளையம் புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கிய தபால் வாக்குப் பதிவில், வாக்குகளை பதிவு செய்ய வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்த அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:20 pm

கடலூரில் நிலவிய சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், தங்களது தபால் வாக்குகளை புதன்கிழமை பதிவு செய்தனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கடலூா் மாவட்டத்தில் 2,590 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு தோ்தல் பணியில் ஈடுபடுவதால், அவா்களுக்கு தபால் வாக்களிக்க புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கடலூா் மாவட்டத்தில் 1,240 போ் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனா். அதன்படி, கடலூா் புதுப்பாளையத்தில் உள்ள புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காலை 11 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கியது.

வெயில் தாக்கல் அதிகமாக இருந்த நிலையில், அதையும் பொருட்படுத்தாமல் ஏராளமான அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

 தபால் வாக்கை செலுத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.

தபால் வாக்கை செலுத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.