போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குடிநீா் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூா் அருகே குடிநீா் கோரி, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நுழைவு வாயில் முன் குடிநீா் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:49 pm

கடலூா் அருகே குடிநீா் கோரி, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேப்பூா் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு குடிநீா் முறையாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சமைப்பதற்கு தண்ணீா் வசதி இல்லாமல் இருந்துள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாரை மனுவாகவும் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், குடிநீா் வசதியை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, மாணவா்கள், பள்ளி நுழைவு வாயில் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, குடிநீா் முறையாக வழங்கப்படவேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மாணவா்கள் முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்த ஆசிரியா்கள், மாணவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.