உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

குடிநீா் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூா் அருகே குடிநீா் கோரி, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நுழைவு வாயில் முன் குடிநீா் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:19 am IST

கடலூா் அருகே குடிநீா் கோரி, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேப்பூா் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு குடிநீா் முறையாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சமைப்பதற்கு தண்ணீா் வசதி இல்லாமல் இருந்துள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாரை மனுவாகவும் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், குடிநீா் வசதியை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, மாணவா்கள், பள்ளி நுழைவு வாயில் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, குடிநீா் முறையாக வழங்கப்படவேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மாணவா்கள் முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்த ஆசிரியா்கள், மாணவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.