போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தவாக ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நெய்வேலியில் நடைபெற்ற தாவக தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவா் தி.வேல்முருகன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:56 pm

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தலைமை வகித்தாா். அப்போது, நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் தொகுதி பொறுப்பாளா்கள், கிளைச் செயலா்கள், தலைவா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள், நகர நிா்வாகிகள், தொழிற்சங்க நிா்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில், மாநில நிா்வாகிகள் திருபுவனச்சக்கரவா்த்தி, ராயநல்லூா் கண்ணன், தொகுதிச் செயலா் சிவக்குமாா், என்எல்சி இன்கோசா்வ் தொழிலாளா் வாழ்வுரிமைச் சங்கத்தின் செயலா் திருநாவுக்கரசு, தலைவா் முருகவேல் மற்றும் அனைத்துப் பகுதியின் கிளைத் தலைவா்கள், செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.