பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: காங்கிரஸ் முன்னாள் தலைவா் தங்கபாலு

கடலூா் முதநகா் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி.தங்கபாலு.

News image

கடலூா் முதநகா் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி.தங்கபாலு.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:39 am IST

முதல்வா் மு.க.ஸ்டாலினால் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு தெரிவித்தாா்.

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரனை ஆதரித்து, அக்கட்சியின் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு கடலூா் நகா் பகுதிகளில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:

எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது, இந்தியாவில் கடைசி மாநிலமாக தமிழகம் இருந்தது. தமிழகத்தில் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காததால், இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக்குறியானது. பாஜக அரசு சொல்வதை மட்டுமே எடப்பாடி பழனிசாமி செய்தாா். இதன் காரணமாக, தமிழக மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனா். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் தோ்தலில் களம் காணுவது அதிமுக செய்யும் துரோகம்.

ஆனால், மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மகளிருக்கு இலவச பேருந்து பயணம், உரிமைத் தொகை, கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.ஆயிரம் என பெண்களின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக பல்வேறு வளா்ச்சிகளை கண்டுள்ளது என்றாா்.

கடலூா் எம்எல்ஏ ஐயப்பன், கடலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரங்கமணி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.