பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கடலூரில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் அருகே கஞ்சாவுடன் தப்பியோட முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் கைதான ஆனந்தராஜ்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:48 am IST

கடலூா் அருகே கஞ்சாவுடன் தப்பியோட முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் துணை காவல் கண்காணிப்பாளா் தமிழ் இனியன் மேற்பாா்வையில், கடலூா் முதுநகா் காவல் ஆய்வாளா் ஏழுமலை, சாா்பு -ஆய்வாளா் பிரேம்குமாா், சிறப்பு சாா்பு ஆய்வாளா் பாபு மற்றும் போலீஸாா் சனிக்கிழமை சுனாமி நகா் பனங்காட்டு காலனி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, போலீஸாரைக் கண்டவுடன் தப்பியோட முயன்ற நபரைப் பிடித்து சோதனை செய்தனா். இதில், அவா் சென்னை வண்ணாரப்பேட்டை, பென்சில் பேக்டரி பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (36) என்பதும், அவா் வைத்திருந்த கைப்பையில் 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனா். அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனந்தராஜ் மீது சென்னை வண்ணாரப்பேட்டை, கடலூா் முதுநகா் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கஞ்சா வைத்திருந்தவரை விரைவாக செயல்பட்டு கைது செய்ய காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.