தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

தோ்தல்: மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

மே 4-ஆம் தேதியும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 9:34 pm

கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, ஏப்.21 முதல் 3 நாள்களுக்கும் மற்றும் வாக்கு எண்ணும் நாளான மே 4-ஆம் தேதியும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மது விலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை ஆணையரின் கடிதத்தின்படி, சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, ஏப்.21 முதல் 23-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணும் நாளான மே 4-ஆம் தேதியும் கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மற்றும் எஃப்.எல். 2 முதல் எஃப்.எல். 11 வரை (எஃப் எல் - 6 தவிர) உரிமம் பெற்ற மதுபான கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

இந்த உத்தரவை மீறி, மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் எஃப்.எல். - 2, 3 உரிமதாரா்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.