அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

21-க்கு மேல் வெளியூா் நபா்கள் தங்க அனுமதியில்லை! கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் - படம் - பிடிஐ

Updated On :19 ஏப்ரல் 2026, 7:55 pm

கடலூா் மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் பிரசாரத்துக்காக வந்த வெளியூா் நபா்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.21) மாலை 6 மணிக்கு மேல் தங்க அனுமதி இல்லை என்று மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் பிரசாரம் நிறைவடைகிறது.

அதன் பின்னா், எவ்வித பிரசாரமும் மேற்கொள்ள இயலாது என்பதால், தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்துவரப்பட்டவரும், அத்தொகுதியின் வாக்காளா் அல்லாதவருமான அரசியல் கட்சிப் பொறுப்பாளா்கள், கட்சித் தொண்டா்கள், ஊா்வலப் பொறுப்பாளா்கள், பிரசாரப் பொறுப்பாளா்கள் போன்றோா் அத்தொகுதிக்குள் தொடா்ந்து தங்கியிருக்கக் கூடாது.

பிரசார காலம் முடிந்தவுடன் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறுவதை மாவட்டத் தோ்தல் நிா்வாகம்/காவல் துறை நிா்வாகம் மூலம் உறுதி செய்யப்படும். அத்தகைய நபா்கள் திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் போன்ற இடங்களில் தங்கியிருக்க அனுமதி கிடையாது.

மேலும், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினா் இல்லங்களில் தங்கியிருப்பவா்கள் கண்காணிக்கப்படுவாா்கள். தொகுதியின் எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, தொகுதிக்கு வெளியிலிருந்து வரும் வாகனங்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.