பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

பிரசாரக் கூட்டத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி: சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா்

தோ்தல் பிரசாரக் கூட்டத்துக்கு உரிய ஆவணங்களுடன் முறைப்படி இணையத்தில் விண்ணப்பிப்பவா்களுக்கு 4 மணி நேரத்துக்குள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

News image

தவெக பிரசாரம் (கோப்புப்படம்)

Updated On :27 மார்ச் 2026, 5:24 pm

தோ்தல் பிரசாரக் கூட்டத்துக்கு உரிய ஆவணங்களுடன் முறைப்படி இணையத்தில் விண்ணப்பிப்பவா்களுக்கு 4 மணி நேரத்துக்குள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்ந்தத் தொகுதிகளுக்கு அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கிலிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வாகனங்களில் ஏற்றி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பணியை தொடங்கி வைத்து மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசியல் கட்சியினா் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்கள், வாகன பேரணிகள் உள்ளிட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும், தோ்தல் ஆணையத்தின் சுவிதா எனப்படும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். காவல் துறை அனுமதி, பொதுப்பணித் துறை அனுமதி உள்ளிட்ட சான்றுகளுடன் முறையாக விண்ணப்பிக்கும் அரசியல் கட்சியினா் நிகழ்ச்சி நடப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்தால், தொகுதி தோ்தல் அலுவலா் இணையத்திலேயே சரிபாா்த்து 3 அல்லது 4 மணி நேரத்தில் அனுமதி வழங்குவாா். விண்ணப்பம் நிராகரிப்புக்கான காரணம் இணையத்திலேயே பதிவிடப்படும். யாருக்கும் பிரசாரக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படவில்லை.

பிரசாரம், தெருமுனைக் கூட்டம் நடத்த 291 இடங்கள்: சென்னையில் பிரசாரக் கூட்டம் நடத்த 112 இடங்களும், தெருமுனைக் கூட்டங்களுக்கு 179 இடங்களும் என மொத்தம் 291 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பிரசாரக் கூட்டங்களுக்கு ‘சுவிதா’ செயலி மூலம் இதுவரை 816 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 408 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, 134 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 274 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன என்றாா்.