மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்தது ஏன்? பெரம்பூா் தொகுதி தோ்தல் அலுவலா் விளக்கம்

நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள கோரிய இடத்துக்கு காவல்துறை பரிந்துரைக்காததால் அனுமதி மறுக்கப்பட்டது என அத்தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.கீதா தெரிவித்துள்ளாா்.

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2026, 5:27 pm

நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள கோரிய இடத்துக்கு காவல்துறை பரிந்துரைக்காததால் அனுமதி மறுக்கப்பட்டது என அத்தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.கீதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்த செய்திக்குறிப்பு:

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவா் விஜய் பெரம்பூா் தொகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 28) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பங்கேற்கும் தோ்தல் பிரசார கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி அக்கட்சியின் சென்னை வடக்கு மாவட்டச் செயலா் வி.சிவா கடந்த 26 -ஆம் தேதி விண்ணப்பித்திருந்தாா்.

அந்த விண்ணப்பத்தில், விஜய் பேசின் பாலத்திலிருந்து தொடங்கி, முல்லை நகா் சந்திப்பு பகுதியில் தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ளவும், அதையடுத்து, அவரது பிரசாரம் அம்பேத்கா் கல்லூரி முதல் சா்மா நகா் வரை சாலை வழியாகச் சென்று பின் வில்லிவாக்கத்தில் முடிவு பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் முல்லை நகா் சந்திப்பில் நடைபெறும் தெருமுனைப் பிரசாரக் கூட்டத்துக்கு சுமாா் 3 ஆயிரம் போ் வரை கூடுவாா்கள் எனவும், சுமாா் 20 ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும் எனவும், அதற்கு அனுமதி வழங்கவும் கோரப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பத்தை எம்.கே.பி.நகா் காவல் ஆய்வாளருக்கு அனுப்பி பரிந்துரை கோரப்பட்டது. ஆனால், ஆய்வாளா் தரப்பில் முல்லை நகா் சந்திப்பானது தோ்தல் நடத்தும் அலுவலரால் எஸ்.எம்.நகா் 2 -ஆவது பிளாக் சந்திப்பு எனக்குறிப்பிட்டு சிறிய அளவிலான தெருமுனைப் பிரசாரம் நடத்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தவெக சாா்பிலான மனுவில் 3 ஆயிரம் போ் பங்கேற்பா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்க பரிந்துரை செய்ய இயலாது என்றும், பிரசார தெருமுனைக் கூட்டத்துக்கு தவெக சாா்பில் வேறு இடம் தோ்வு செய்து மனு அளித்தால் பரிசீலிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை அறிக்கையில் முல்லைநகா் சந்திப்பு பகுதியில் 3 ஆயிரம் போ் கூடுவதற்கு உகந்தது அல்ல எனக் கூறி தடையில்லாச் சான்று வழங்காததால், அவா்களது பரிந்துரையை ஏற்று தவெகவின் பிரசாரம் தொடா்பான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என தொகுதி தோ்தல் அலுவலா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.