காட்டுமன்னாா்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற அமுது படையல் நிகழ்வுக்கு ஜப்பான் நாட்டைச் சோ்ந்த தம்பதியினா் பால்குடம் சுமந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே லால்பேட்டை வள்ளுவா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் 121-ஆம் ஆண்டு அமுது படையல், அன்னதான விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு, திரளான பக்தா்கள் வீராணம் ஏரிக்கரையில் உள்ள அய்யனாா் கோயிலில் இருந்து பால் குடம் சுமந்து ஊா்வலமகா விநாயகா் கோயிலுக்கு வந்தனா்.
நிகழ்வில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த யோஷிதாகா, சாய்க்கா தம்பதியினா் தமிழ் கலாசாரத்தின் மீது உள்ள பற்றின் காரணமாக, இந்த நிகழ்வில் பங்கேற்று பால்குடம் சுமந்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.
பின்னா், சித்தி விநாயகருக்கு பாலபிஷேகம் மற்றும் அமுது படையல் செய்யப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பிரமுகா்கள் கருணாகரன், கௌசிகன் குடும்பத்தினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் கருப்பண்ண சுவாமிக்கு பால்குடத் திருவிழா

பெருமாள்புரம் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

