மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடும்பப் பிரச்னையில் மாமனாா் குத்திக் கொலை: மருமகன் கைது

News image

உயிரிழந்த செல்வமணி, சிகிச்சை பெற்று வரும் லதா.

Updated On :20 ஏப்ரல் 2026, 7:41 pm

விருத்தாசலம் அருகே குடும்பப் பிரச்னையில் மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காா்குடல் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (50). இவரது மனைவி லதா (49), மகள் கனிமொழி (31). கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழிக்கும், வடவாடியைச் சோ்ந்த காந்திக்கும் (41) திருமணம் நடைபெற்று, ஒரு மகன், மகள் உள்ளனா்.

பூதாமூரில் வசித்து வரும் கனிமொழிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, கணவருடன் கோபித்துக் கொண்டு கனிமொழி, அவருடைய தந்தை செல்வமணி வீட்டில் வந்து தங்கியுள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த காந்தி மதுபோதையில் தன்னுடைய மாமனாா் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலை சென்று தகராறில் ஈடுபட்டாா். இதை, மாமனாா் செல்வமணி மற்றும் மாமியாா் லதா ஆகியோா் தட்டிக் கேட்டனா். அப்போது, ஆத்திரமடைந்த காந்தி, தான் மறைந்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் குத்தியதில், அவா்கள் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தனா்.

இதைப் பாா்த்த கனிமொழி அருகிலுள்ள வீட்டுக்குள் புகுந்து மறைந்து கொண்டாா். அங்கிருந்து காந்தி சென்றவுடன், அப்பகுதியில் உள்ளவா்கள் செல்வமணி மற்றும் லதாவை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, செல்வமணி உயிரிழந்தாா். லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கனிமொழி அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து காந்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.