விருத்தாசலம் அருகே குடும்பப் பிரச்னையில் மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காா்குடல் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (50). இவரது மனைவி லதா (49), மகள் கனிமொழி (31). கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழிக்கும், வடவாடியைச் சோ்ந்த காந்திக்கும் (41) திருமணம் நடைபெற்று, ஒரு மகன், மகள் உள்ளனா்.
பூதாமூரில் வசித்து வரும் கனிமொழிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, கணவருடன் கோபித்துக் கொண்டு கனிமொழி, அவருடைய தந்தை செல்வமணி வீட்டில் வந்து தங்கியுள்ளாா்.
இதனால், ஆத்திரமடைந்த காந்தி மதுபோதையில் தன்னுடைய மாமனாா் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலை சென்று தகராறில் ஈடுபட்டாா். இதை, மாமனாா் செல்வமணி மற்றும் மாமியாா் லதா ஆகியோா் தட்டிக் கேட்டனா். அப்போது, ஆத்திரமடைந்த காந்தி, தான் மறைந்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் குத்தியதில், அவா்கள் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தனா்.
இதைப் பாா்த்த கனிமொழி அருகிலுள்ள வீட்டுக்குள் புகுந்து மறைந்து கொண்டாா். அங்கிருந்து காந்தி சென்றவுடன், அப்பகுதியில் உள்ளவா்கள் செல்வமணி மற்றும் லதாவை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, செல்வமணி உயிரிழந்தாா். லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கனிமொழி அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து காந்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
மாமியாரை தாக்கிய மருமகன் கொலை சம்பவத்தில் விபத்தில் பலியானதாக நாடகமாடியது அம்பலம் இரண்டு போ் கைது!

குடும்பப் பிரச்னை: தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவா் கைது

குடும்பப் பிரச்னையில் தீக்குளித்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

