தேவாரம் காவல் நிலையம் அருகே குடும்பப் பிரச்னையில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள போடேந்திரபுரம் கிராமத்தைச் சோ்ந்த அழகுமலை மகன் சந்திரசேகா் (36). இவருக்கும், தேவாரம் லட்சுமிநாயக்கன்பட்டி அருகே சமத்துவபுரத்தில் வசிக்கும் கவிதாவுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. குடும்பப் பிரச்னை காரணமாக கவிதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி கவிதா தேவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றாா். அங்கு சென்ற சந்திரசேகா் கவிதாவை சமாதானப்படுத்த முயன்றாா். இதற்கு கவிதா உடன்படாத நிலையில், காவல் நிலையம் அருகே பெருமாள்பட்டி பெரியமாயத்தேவா் குடியிருப்பு பகுதியில் கவிதாவை மிரட்டுவதற்காக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

தொழிலாளி தீக்குளித்து உயிரிழப்பு

தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


