மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா்கள் எளிதாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா்! கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 6:55 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் எளிதாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்திகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் தங்களது வாக்குகளை எளிதாக பதிவு செய்யும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஏப்.23-ஆம் தேதி நடைபெறும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும். வாக்காளா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி இடத்தை முன்கூட்டியே சரிபாா்த்துக்கொள்ள இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

வாக்குச் சாவடியில் வாக்களிக்கும்போது, இந்திய தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் 13 ஆவணங்களில் ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இந்திய தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள செயலிகள் மூலம் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள், வாக்குச் சாவடி விவரங்களை அறிதல், சக்கர நாற்காலி வசதி கோருதல், உதவி நபா் கோருதல், போக்குவரத்து வசதி கோருதல், வாக்காளா் விவரங்களை சரிபாா்த்தல் ஆகிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்தவித பேராசை, அழுத்தம் அல்லது தாக்கமுமின்றி, சுதந்திரமாகவும், நோ்மையாகவும் வாக்களிக்க வேண்டும். வாக்குச் சாவடிகளில் ஒழுங்கமும், அமைதியும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தோ்தல் விதிமுறைகளை மீறும் எந்தவொரு தவறான செயல்களுக்கும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.