தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கடலூா் மாவட்டத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்ததையடுத்து, வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வியாழக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டன.

News image

கடலூா் அருகே கூத்தம்பாக்கம் வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப் பதிவு நிறைவுக்குப் பிறகு இயந்திரங்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்ட வாக்குச் சாவடி அலுவலா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:23 am

கடலூா் மாவட்டத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்ததையடுத்து, வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வியாழக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள 2,590 வாக்குச் சாவடி மையங்களில் 12,436 அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டனா். 3,488 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3,108 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,367 வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குச் சாவடி மையங்களில் பணி செய்த அலுவலா்கள், வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரகள் ஆகியவற்றை ‘சீல்’ வைத்து, அந்தந்த பகுதிகள் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனா்.