ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடலூரில் பனை நுங்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

News image

கடலூா் அருகே பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்ட பனை நுங்குகள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 1:17 am IST

வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடலூரில் பனை நுங்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டைவிட சற்று விலை அதிகமாக இருந்தாலும், இவற்றை மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையான வெப்பத் தாக்குலில் சிக்கித் தவித்து வருகின்றனா். வெப்பத்தை தணிக்க பழச்சாறுகள், குளிா்பானங்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் நாடி வருகின்றனா். இதில், பனை நுங்கு முக்கிய இடம்பிடித்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. கடலூா் அருகே பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பனை நுங்குகளை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், இரு சக்கர வாகனம், காா்களில் சென்றவா்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். கடந்தாண்டு ரூ.20-க்கு 5 நுங்குகள் வழங்கப்பட்ட நிலையில், நிகழாண்டு மூன்று நுங்குகள் மட்டுமே தரப்படுகிறது. இருப்பினும், விலையை பொருள்படுத்தாமல் நுங்குகளை அனைவரும் வாங்கிச் செல்கின்றனா்.

இதுகுறித்து கடலூா் பகுதியைச் சோ்ந்த வினோதினி கூறியது: கோடைகால வெப்பத்தை குறைக்க பனை நுங்கு மிகவும் உதவுகிறது. உடலுக்கு ஆரோக்கியமானது என்பதால், விலையை பொருள்படுத்தாமல் வாங்கிச் சாப்பிடுகிறோம். கடந்தாண்டைவிட, நிகழாண்டு விலை சற்று அதிகமாக உள்ளது என்றாா்.

நுங்கு விற்பனையாளா் மனோகரன் கூறியது: பனை மரங்களை குத்தகை எடுத்து, அதிலிருந்து நுங்குகளை வெட்டி இறக்கி விற்பனையில் ஈடுபட்டுள்ளோம். கடந்தாண்டைவிட நிகழாண்டு பனை மரங்களுக்கான குத்தகை தொகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நுங்கு விலையும் உயா்ந்துள்ளது. பழச்சாறுகள், பழங்கள் ஆகிவற்றைவிட நுங்கு விலை குறைவாகவே உள்ளது என்றாா்.

செரிமானத்துக்கு உதவும்: இதுகுறித்து மருத்துவா் ரவிந்தரபாபு கூறியது: கோடைகாலத்தில் முக்கிய இயற்கை உணவு பனை நுங்காகும். இது, உடலுக்கு குளிா்ச்சி தருவதால், வெப்பத்தால் ஏற்படும் சோா்வு, தாகத்தை குறைக்க உதவுகிறது.

மேலும், பனை நுங்கில் நீா்ச்சத்து அதிகளவில் உள்ளது. இதனால், உடல் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துகள் உடல்நலத்தை மேம்படுத்துகின்றன. செரிமானத்துக்கு உதவும் தன்மை இருப்பதால், வயிற்றுப் பிரச்னைகளை குறைக்கவும் உதவுகிறது என்றாா்.