15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

திருவிழாவிற்கு தந்தை அழைத்து செல்லாததால் விஷம் அருந்திய பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:42 am IST

விருத்தாசலம் அருகே கோயில் திருவிழாவிற்கு தந்தை அழைத்துச் செல்ல மறுத்ததால் ல் மனமுடைந்து விஷம் அருந்திய பிளஸ் 2 மாணவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே ஏ.அகரம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் (38). இவரது மூத்த மகன் பழனிவேல் (17), பெண்ணாடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடந்த மாா்ச் 2ஆம் தேதி விருத்தாசலத்தில் நடைபெற்ற மாசி மகம் திருவிழாவிற்கு மணிவேல் செல்லத் தயாரானதைப் பாா்த்த பழனிவேல், தானும் வருவதாக கூறியுள்ளாா்.

ஆனால் பொதுத்தோ்வு எழுத வேண்டியிருப்பதால், படிப்பில் கவனம் செலுத்துமாறு மகனிடம் அறிவுறுத்திவிட்டு, மணிவேல் திருவிழாவிற்கு சென்றுள்ளாா். இதனால் மனவேதனை அடைந்த பழனிவேல்

பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி மயங்கியுள்ளாா். உடனடியாக அவரை குடும்பத்தினா் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

தீவிரச் சிகிச்சைக்குப் பிறகு ஏப்ரல் 12ஆம் தேதி வீடு திரும்பிய அவருக்கு , ஏப்ரல் 20ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் , கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் திங்கள்கிழமை (ஏப்ரல் 26) பழனிவேல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது தந்தை மணிவேல் அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.