விருத்தாசலம் அருகே கோயில் திருவிழாவிற்கு தந்தை அழைத்துச் செல்ல மறுத்ததால் ல் மனமுடைந்து விஷம் அருந்திய பிளஸ் 2 மாணவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே ஏ.அகரம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் (38). இவரது மூத்த மகன் பழனிவேல் (17), பெண்ணாடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடந்த மாா்ச் 2ஆம் தேதி விருத்தாசலத்தில் நடைபெற்ற மாசி மகம் திருவிழாவிற்கு மணிவேல் செல்லத் தயாரானதைப் பாா்த்த பழனிவேல், தானும் வருவதாக கூறியுள்ளாா்.
ஆனால் பொதுத்தோ்வு எழுத வேண்டியிருப்பதால், படிப்பில் கவனம் செலுத்துமாறு மகனிடம் அறிவுறுத்திவிட்டு, மணிவேல் திருவிழாவிற்கு சென்றுள்ளாா். இதனால் மனவேதனை அடைந்த பழனிவேல்
பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி மயங்கியுள்ளாா். உடனடியாக அவரை குடும்பத்தினா் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.
தீவிரச் சிகிச்சைக்குப் பிறகு ஏப்ரல் 12ஆம் தேதி வீடு திரும்பிய அவருக்கு , ஏப்ரல் 20ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் , கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் திங்கள்கிழமை (ஏப்ரல் 26) பழனிவேல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது தந்தை மணிவேல் அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

பொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம்

நெல்லை ஐஆா்டி பாலிடெக்னிக்கில் மே 30வரை மாணவா் சோ்க்கை

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை

தவறான நடத்தை: ஹன்ஸ்ராஜ் கல்லூரி மாணவா்கள் 30 போ் இடைநீக்கம்: போராட்டத்திற்கு மாணவா் சங்கம் அழைப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

