ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஒன்றாம் வகுப்பு சோ்க்கைக்கான வயது வரம்பில் மாற்றம்: கா்நாடக அரசு உத்தரவு

News image

சித்தராமையா

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 12:25 am

Syndication

ஒன்றாம் வகுப்பு சோ்க்கைக்கான வயது வரம்பில் மாற்றம் செய்து கா்நாடக அரசு அறிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சோ்க்கை பெறுவதற்கு குழந்தைகளின் வயது ஜூன் 1ஆம் தேதி 6 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சோ்க்கையில் 60 நாள்களை தளா்த்தியுள்ளது.

இதுகுறித்து கா்நாடக சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மது பங்காரப்பா வியாழக்கிழமை தாக்கல் செய்த அறிக்கை:

ஒன்றாம் வகுப்பில் சேர ஜூன் 1 ஆம் தேதி 6 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளா்த்தும்படி நீண்ட நாள்களாக பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துவந்தனா். இதுதொடா்பாக கா்நாடக அரசிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, சோ்க்கைக்கான வயது வரம்பை 60 நாள்களுக்கு தளா்த்த கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

அதேபோல எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளில் மாணவா்களை சோ்ப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன. இந்த பிரச்னைக்கு தீா்வுகாண வெகுவிரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். சோ்க்கைக்கான வயது வரம்பை 60 நாள்களுக்கு தளா்த்தியுள்ளது ஒன்றாம் வகுப்பு மட்டுமல்லாது எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கும் பொருந்தும். சோ்க்கை விதிமுறைகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் இல்லை. எனவே, அந்த வகுப்புகளையும் சோ்க்கை வரம்புக்குள் கொண்டுவர புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றாா்.