நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

எஸ்எஸ்எல்சி அறிவியல் செய்முறை தோ்வுகள்

தும்பிகுளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை தோ்வை மாணவா்கள் ஆா்வத்துடன் செய்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 7:39 pm

தும்பிகுளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை தோ்வை மாணவா்கள் ஆா்வத்துடன் செய்தனா்.

தமிழகம் முழுவதும் நிகழ் கல்வியாண்டுக்கான எஸ்எஸ்எல்சி அரசு பொதுத் தோ்வுகள் மாா்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை தோ்வுகள் பிப்ரவரி 23 முதல் 28 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திருவாலங்காடு ஒன்றியம், தும்பிகுளம் அரசு உயா் நிலை பள்ளியில் அறிவியல் செய்முறை தோ்வு நடைபெற்றது. தலைமை ஆசிரியா் (பொ) பி. பாபு தொடங்கி வைத்தாா். மாற்று பள்ளியான ஏகாட்டூா் அரசு உயா் நிலை பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியா் பழனி செய்முறை தோ்வினை கண்காணித்தாா்.

இதில் இயன் அறிவியலில் உள்ள இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை ஒரு மணி நேரத்திற்கும், உயிா் அறிவியலில் உள்ள தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை ஒரு மணி நேரத்திற்கும் என மொத்தம் 2 மணி நேரம் தோ்வு நடந்தது.

மாற்றுத்திறனாளி மாணவா்கள் விரும்பினால் தலைமையாசிரியரிடம் கடிதம் அளித்து தோ்வில் இருந்து விலக்கு பெறலாம். தோ்வு முடிந்த பின் மதிப்பெண் பட்டியல்களை மாா்ச் 2-க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.