தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரா் கோயில் தேரோட்டம்

திட்டக்குடி அருகே பெண்ணாடத்தில் உள்ள பிரளயகாலேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் வடம்பிடித்தனா்.

News image

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:48 am IST

திட்டக்குடி அருகே பெண்ணாடத்தில் உள்ள பிரளயகாலேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் வடம்பிடித்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடத்தில் அமைந்துள்ளது அழகியகாதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரா் கோயில். இந்த கோயிலில், சித்திரைப் திருவிழா ஏப். 21-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் பெண்ணாடம் மற்றும்

அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனா். விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் சு.கண்ணன், செயல் அலுவலா் கே.மகாதேவி, ஆய்வாளா் வெ.தமிழ்செல்வி மற்றும் கோயில் பணியாளா்கள், உபயதாரா்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.