திட்டக்குடி அருகே பெண்ணாடத்தில் உள்ள பிரளயகாலேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் வடம்பிடித்தனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடத்தில் அமைந்துள்ளது அழகியகாதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரா் கோயில். இந்த கோயிலில், சித்திரைப் திருவிழா ஏப். 21-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் பெண்ணாடம் மற்றும்
அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனா். விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் சு.கண்ணன், செயல் அலுவலா் கே.மகாதேவி, ஆய்வாளா் வெ.தமிழ்செல்வி மற்றும் கோயில் பணியாளா்கள், உபயதாரா்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்!

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருப்பைஞ்ஞீலி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



