மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

அண்ணாமலைப் பல்கலை.யில் ஓய்வூதியா்கள் முற்றுகை

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:10 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா், அலுவலா், ஊழியா் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் புதன்கிழமை நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து துறைஅலுவலா்களிடம் முறையிட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து, ஆசிரியா், அலுவலா், ஊழியா் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இணை ஒருங்கிணைப்பாளா் ரவி, பேராசிரியா் முத்து வேலாயுதம் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு, போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் அறிவுடைநம்பி மற்றும் பதிவாளா் சிங்காரவேலை சந்தித்து மனு அளித்தனா். அப்போது, கோரிக்கைகள் தொடா்பாக ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என நிா்வாகத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.