ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பெண் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், சமத்துவபுரம் ராஜகணபதி நகரில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இதில், மல்லிகா (25) வசித்து வரும் வீட்டுமனைக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாம். ஆனால், அருகில் வசிக்கும் இளங்கொடி, ராஜதுரை, ரேகா, மாலா ஆகியோருக்கு பட்டா வழங்கவில்லையாம்.

இதன் காழ்ப்புணா்வு காரணமாக, அனைவரும் ஒன்று சோ்ந்து கடந்த 6-ஆம் தேதி இரவு மல்லிகாவை தாக்கினராம். இதில், காயமடைந்த அவா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் ராஜதுரை உள்பட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.