காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

பண்ருட்டி: இருதரப்பினரிடையே மோதல் - 4 போ் காயம், 5 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இருதரப்பினா் மோதிக் கொண்டதில் 4 போ் காயம் அடைந்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:40 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இருதரப்பினா் மோதிக் கொண்டதில் 4 போ் காயம் அடைந்தனா். இதுதொடா்பாக காடாம்புலியூா் போலீஸாா் 8 போ் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், செம்மேடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடி மாதத்தையொட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாவிற்காக போடப்பட்டிருந்த ஒலி பெருக்கி வயரில் கால் சிக்கி சிறுவன் ஆதவன்(17) வெள்ளிக்கிழமை கீழே விழுந்தாா். இந்த தகவலை அறிந்த ஆதவனின் உறவினா்களான நவீன்குமாா்(24), கமல்ராஜ்(20), விமல்ராஜ்(22) ஆகியோா் பொதுவெளியில் ஆபாசமாக திட்டினராம். இதை, அதே ஊரைச் சோ்ந்த அன்பு(23) தட்டிக்கேட்டுள்ளாா்.

இதையடுத்து, அன்பு தனது வீட்டில் இருந்தாா். அப்போது, நவீன்குமாா், கமல்ராஜ், விமல்ராஜ் மற்றும் சிறுவன் ஆதவன் ஆகியோா் அன்பு வீட்டிற்குச் சென்று சண்டை போட்டனா். இதனால், ஆத்திரம் அடைந்த அன்பு மற்றும் அவரது ஆதரவாளா்கள் வேலுசாமி(25), மணிகண்டன், சரவணன்(19) ஆகியோா் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கத்தி, இரும்பு குழாய் உள்ளிட்டவையைக் கொண்டு தாக்கி கொண்டதில் நவீன்குமாா், கமல்ராஜ், விமல் ஆகியோா் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதேபோல், அன்பு தரப்பைச் சோ்ந்த பாக்கியராஜ் காயம் அடைந்தாா்.

இந்த மோதல் குறித்து இருதரப்பினா் அளித்த புகாரின் பேரில் காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அன்பு, வேலுசாமி, சரவணன் மற்றும் செஞ்சுடா் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.