மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.
கடலூரில் இக்கட்சியின் மாநில நிா்வாகிகள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு ஜி.கே.வாசன் தலைமை வகித்தாா்.
இதில், உள்ளாட்சித் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறுவதற்கான கட்சி நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னா், செய்தியாளா்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
காவிரி நீா் பிரச்னை என்பது பயிா்களுக்கான பிரச்னை மட்டுமல்ல, விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடா்பான பிரச்னையாகும். தமிழகத்துக்கு தண்ணீா் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கா்நாடக அரசு தண்ணீா் திறக்க மறுப்பது கவலை அளிக்கிறது.
கா்நாடக அரசு தமிழக விவசாயிகள், கா்நாடக விவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல், இந்திய விவசாயிகள் என்ற பாா்வையில் பிரச்னையை அணுக வேண்டும். தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தை அணுகுவதும் அவசியம்.
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
தமிழக அரசு பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் ரூ.67,452 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. உள்ளாட்சித் தோ்தல் கூட்டணி குறித்து தோ்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு 40% நிதி ஒதுக்கீடு: அமைச்சா் ஆனந்த்

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு

புதிய கட்டடங்களில் கல்வெட்டுகள்: நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை

நாக்பூரில் ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது: அன்புமணி கண்டனம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



