வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடி மரம் நிலைநிறுத்தம்
வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில் புதிய கொடி மரம் நிலை நிறுத்தும் விழா இன்று நடைபெற்றது.

வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடி மரம் நிலைநிறுத்தம்
கடலூர் மாவட்டம், வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில் புதிய கொடி மரம் நிலை நிறுத்தும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமலிங்க சுவாமி என்றழைக்கப்படும் வள்ளல் பெருமானுக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் 2.2.1867அன்று 80 காணி நிலத்தை தானமாக வழங்கினர். அந்த நிலத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார். ஞான சபையில் உள்ள கொடி மரத்தில் ஆண்டு தோறும் தைப்பூசத்தின் முதல்நாள் பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசையுடன் வந்து கொடியேற்றி தைப்பூச விழாவை தொடக்கி வைத்து சிறப்பித்து வருகின்றறனர்.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த கொடி மரம் பழுதடைந்த காரணத்தினால், அதனை மாற்றி புதிய கொடி மரம் ரூ.25 லட்சம் மதிப்பில் நிறுவும் பணியை பார்வதிபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இந்த புதிய கொடி மரத்தை நிலை நிறுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகம், விழாக் குழுவினர் மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர். முன்னதாக கொடிமரத்திற்கு அகவல் பாராயணம் பாடினர்.

வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடி மரம் நிலைநிறுத்தம்
Summary
The ceremony to install a new flagstaff at the Vadalur Samarasa Suddha Sanmarga Sathya Gnana Sabhai was held on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






