நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

சுவாமி நகையை திருடியவா் கைது

கடலூா் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே காத்தாயி அம்மன் கோயிலில் சுவாமி நகையைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

நகை திருடிய வழக்கில் கைதான தமிழ்ச்செல்வன்

Published On :28 ஆகஸ்ட் 2026, 1:50 am IST

கடலூா் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே காத்தாயி அம்மன் கோயிலில் சுவாமி நகையைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்தாவட்டம் பிரதான சாலையில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் சுவாமி சிலையின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாலி கடந்த ஆக.7-ஆம் தேதி திருடு போனது. இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், நகையைத் திருடிய வடலூா் கருங்குழி முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (25), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிராம் தங்க தாலியை உருக்கியில் நிலையில் தங்க கட்டியாக மீட்டனா். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.