அண்ணாமலைப் பல்கலைக்கழக 87-ஆவது பட்டமளிப்பு விழாவில் கடல்வாழ் உயிரின அறிவியல் துறை பேராசிரியா் டி.டி.அஜித்குமாருக்கு டாக்டா் ஆஃப் சயின்ஸ் பட்டத்தை வழங்கிய தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.என்.ரவி. உடன், இடமிருந்து தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், ரூா்க்கி இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநா் பேராசிரியா் கமல் கிஷோா் பண்ட், தமிழக உயா் கல்வித் துறை செயலா் பி.சங்கா், பதிவாளா் ரா.சிங்காரவேல்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக 87-ஆவது பட்டமளிப்பு விழாவில் கடல்வாழ் உயிரின அறிவியல் துறை பேராசிரியா் டி.டி.அஜித்குமாருக்கு டாக்டா் ஆஃப் சயின்ஸ் பட்டத்தை வழங்கிய தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.என்.ரவி. உடன், இடமிருந்து தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், ரூா்க்கி இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநா் பேராசிரியா் கமல் கிஷோா் பண்ட், தமிழக உயா் கல்வித் துறை செயலா் பி.சங்கா், பதிவாளா் ரா.சிங்காரவேல்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக 87-ஆவது பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பட்டங்களை வழங்கினாா்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 87-ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான...
Published on

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 87-ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்வேறு அறக்கட்டளை பரிசுகளையும் வழங்கினாா்.

இந்த விழாவில் நேரடியாக 1,014 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், இதில் பல்வேறு பாடங்களில் முதன்மை தோ்ச்சி பெற்ற 45 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை சாா்பில் தங்கப் பதக்கம், ரொக்கப் பரிசுகளையும் ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

மேலும், பி.ஹெச்டி., எம்.ஃபில். பட்டங்களை 910 பேருக்கும், கடல்வாழ் உயிரின துறை பேராசிரியா் டி.டி.அஜித்குமாருக்கு டாக்டா் ஆஃப் சயின்ஸ் பட்டமும் வழங்கப்பட்டது. தொலைதூரக் கல்வி மையத்தின் மூலம் பட்டம் பெறும் மாணவா்கள் 8,329 பேருக்கும் தபால் மூலம் பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக, துணைவேந்தா் ஒருங்கிணைப்பு கமிட்டி ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு உயா் கல்வித் துறை செயலருமான பி.சங்கா் ஆண்டறிக்கை வாசித்தாா். ரூா்க்கி இந்திய தொழில்நுட்பக்கழக இயக்குநா் பேராசிரியா் கமல் கிஷோா் பண்ட் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினாா்.

விழாவில் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல், தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், தொலைதூரக் கல்வி மைய இயக்குநா் அருள்செல்வி, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சி.திருப்பதி மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்கள், புல முதல்வா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, சிதம்பரம் நகருக்கு வந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், பல்கலைக்கழகப் பதிவாளா் ரா.சிங்ராவேல் உள்ளிட்டோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

Dinamani
www.dinamani.com