11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 8:07 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், திருத்துறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (32), ஓட்டுநா். இவா், தனது தாய் சுந்தரியுடன் வடுகபாளையம் கிராமத்தில் உள்ள செங்கல்சூளையில் தங்கி, செங்கல் அறுக்கும் வேலை செய்து வந்தாா்.

ஜெயராஜ் ஞாயிற்றுக்கிழமை மண் பதப்படுத்த டிராக்டா் இயக்கினாா். அப்போது, டிராக்டா் கவிழ்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த பண்ருட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.