வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் நகைகள் திருட்டு: 2 பெண்கள் கைது

News image

நேத்ரா

Updated On :21 பிப்ரவரி 2026, 7:03 pm

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்க நகைகளை நூதன முறையில் திருடிச் சென்றதாக 2 பெண்களை நகர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் மனைவி வள்ளி (60). இவா், வெள்ளிக்கிழமை காலை வடலூரில் உள்ள அவரது அக்காள் வீட்டுக்குச் செல்வதற்காக சிதம்பரம் பேருந்து நிலையத்துக்கு வந்து பேருந்தில் ஏறி அமைந்திருந்தாா்.

அப்போது, பக்கத்து இருக்கையில் அமா்திருந்த 2 பெண்கள் பேருந்து நிலையத்தில் திருடா்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், நகைகளை கழற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கூறினராம்.

இதையடுத்து, வள்ளி தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, வளையல் உள்ளிட்ட 7 பவுன் நகைகளை கழற்றிய நிலையில், அவற்றை பாதுகாப்பாக காகிதத்தில் மடித்துத் தருவதாகக் கூறி வாங்கிய அந்த 2 பெண்களுடம் நூதன முறையில் வேறு ஒரு காகித பொட்டலத்தை கொடுத்துவிட்டு பேருந்திருந்து இறங்கிச் சென்றுவிட்டனா்.

 அஞ்சலையம்மாள்

அஞ்சலையம்மாள்

பின்னா், வள்ளி அந்த காகித பொட்டலத்தை திறந்து பாத்தபோது, அதில் 2 கவரிங் வளையல்கள் இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் வழக்கு பதிந்து, அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

இதில், நகைகளை ஏமாற்றி திருடிச் சென்றவா்கள் கிருஷ்ணகிரி பாலனப்பள்ளி, தீா்த்தம் கிராமம் சந்தை வீதி கிட்டப்பா மனைவி அஞ்சலையம்மான் (60), அதே பகுதியைச் சோ்ந்த பசவராஜ் மனைவி நேத்ரா (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த 7 பவுன் தங்க நகைகளையும் மீட்டனா்.