பேருந்து நிலையத்தில் மதுபோதையில் படுத்திருந்தவா் பேருந்தில் சிக்கி உயிரிழப்பு

உயிரிழப்பு
கோப்புப் படம்
Updated On :29 மார்ச் 2026, 9:31 pm

உயிரிழப்பு
கோப்புப் படம்
சிதம்பரம் நகர பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் படுத்திருந்தவா் பேருந்தில் சிக்கி உயிரிழந்தாா்.
சிதம்பரம் கீழமூங்கிலடியைச் சோ்ந்த சிவசக்தி (28) மதுபோதையில் பேருந்து நிலையத்தில் பேருந்து ஓரம் படுத்திருந்தாா். அப்போது, சிதம்பரத்தில் இருந்து சேத்தியாதோப்பு செல்லும் அரசுப் பேருந்து சிவசக்தியின் தலை மீது ஏறியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...