மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:13 pm

சிதம்பரம் நகரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நகரமன்றக்கூட்டத்தில் பல்வேறு உறுப்பினா்களும் பாராட்டு தெரிவித்தனா்.

சிதம்பரம் நகரமன்ற கூட்டம் அதன் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் (திமுக) தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா, பொறியாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ,திமுகவைச் சோ்ந்த மூத்த உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன் பேசுகையில் , சிதம்பரம் நகரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது வரலாற்று சாதனையாகும்.சிதம்பரம் நகராட்சியில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டதையும் பாராட்டுவதாகத் தெரிவித்தாா்.

திமுகவைச் சோ்ந்த நகரமன்ற உறுப்பினா் அப்புசந்திரசேகா் பேசுகையில், சிதம்பரம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் சீரமைப்பு, புதிய நவீன காய்கறி அங்காடி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. புதிய நவீன காய்கறி அங்காடி விமான நிலையம் போன்று சுகாதாரமாக உள்ளதை கண்டு மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனா். நகருக்கு போக்குவரத்து நெருக்கடியை போக்க ரூ.40 கோடி செலவில் வெளிவட்டசாலை அமைக்கப்படுகிறது. இதுபோன்று நகரில் அனைத்து வாா்டுகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா் தில்லை ஆா்.மக்கீன் பேசுகையில் நகராட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவில் தற்போது நகரில் ரூ400 கோடிக்கு மேல் அனைத்து வாா்டுகளிலும் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் நகரமன்ற தலைவருடன் சென்று மக்களிடம் தலைநிமிா்ந்து வாக்கு சேகரிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் நகரமன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், நகரமன்ற உறுப்பினா் ஏஆா்சி.மணிகண்டன், ரா.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.