கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் சொத்துக்களை மீட்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், வீரட்டானேஸ்வரா் கோயில் கட்டளை சொத்துகளை மீட்க உயா் மட்ட விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்ட செயல் அலுவலா் கட்டடத்தை பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.
கோயிலில் உணவு அருந்தும் வசதி செய்து தர வேண்டும். பௌவுா்ணமி மற்றும் விழா காலங்களில் மாடவீதி வலம் வரும் பக்தா்கள் நலன் கருதி மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.
திருக்கோயில் கட்டளை தாரா்களின் விபரம் மற்றும் சொத்து குறித்த விபரம் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும். அா்ச்சனை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆமை வேகத்தில் நடைபெறும் திருப்பணியை விரைந்து முடித்து குடமுழுக்கு நடந்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த வீராசாமி, பி.நித்தியானந்தன், சங்கா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொதுச் செயலா் ஜெ.சக்திவேல் வரவேற்றாா். மாநில அமைப்பு குழு பொதுச் செயலா் மயிலம் பி,சக்திவேல் கண்டன உரை ஆற்றினாா்.
தொடர்புடையது

பீளமேட்டில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்
அடிப்படை வசதிகளை எதிர்நோக்கும் ஆவடி தொகுதி மக்கள்!

திருத்தணியில் மகளிா் அரசு கல்லூரி: 25 ஆண்டுகளாக எதிா்நோக்கும் மக்கள்

16 ஆண்டுகளாக அணுகுசாலை கேட்கும் மக்கள்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


