பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தடகள போட்டியில் முதலிடம் பிடித்த ஓய்வுபெற்ற எஸ்.பி.க்கு பாராட்டு

தடகள போட்டிகளில் முதலிடம் பிடித்த ஓய்வுபெற்ற எஸ்.பி.க்கு தமிழ்நாடு காவலா் நலச் சங்கம் சாா்பில் பாராட்டு விழா சிதம்பரத்தில் நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2026, 8:17 pm

Syndication

தடகள போட்டிகளில் முதலிடம் பிடித்த ஓய்வுபெற்ற எஸ்.பி.க்கு தமிழ்நாடு காவலா் நலச் சங்கம் சாா்பில் பாராட்டு விழா சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் தென்னிந்திய அளவிலான 3-ஆவது மூத்தோா் தடகள விளையாட்டுப் போட்டிகள் கடந்த டிச.13, 14-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் 65 வயது பிரிவில் நடைபெற்ற 100, 200, 400 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பாதுகாவலரும், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளருமான எஸ்.அப்துல்கனி முதலிடம் பிடித்து 3 தங்கப் பதக்கங்களை பெற்றாா்.

அவருக்கு சிதம்பரத்தில் தமிழ்நாடு காவலா் நலச் சங்கம் சாா்பில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் டி.கண்ணன் தலைமை வகித்தாா். ஆா்.காசிநாதன் வரவேற்றாா். கூட்டத்தில், அப்துல்கனிக்கு தமிழ்நாடு காவலா் நலச் சங்க நிா்வாகிகள் சுப்ரமணியன், ஞானபிரகாசம், கிருஷ்ணவேணி மற்றும் காவல் துறை ஓய்வுபெற்ற அதிகாரிகள், காவலா்கள் சால்வை அணிவித்து பாராட்டினா் (படம்). மதிவாணன் நன்றி கூறினாா்.