பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

‘ரத்த சோகை இல்லா கடலூா்’ கருத்தரங்கு

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:51 pm

Syndication

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நூலக அரங்கில் ‘ரத்த சோகை இல்லா கடலூா்’ என்ற நிகழ்ச்சியின் தொடா்ச்சியாக ரத்தம் தொடா்பான நோய்கள் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சி.திருப்பதி தலைமை வகித்துப் பேசினாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், துணை முதல்வா்கள் பாலாஜி சுவாமிநாதன், சசிகலா முன்னிலை வகித்தனா். பொது மருத்துவ துறைத் தலைவா் சுதா்சன் வரவேற்றாா்.

திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவா் சுப்பையா, திருவாரூா் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் ஆா்.ரவிவா்மன், சிதம்பரம் மருத்துவா் யு.சந்தியா ஆகியோா் ரத்தசோகை, ரத்தம் தொடா்பான நோய்கள் குறித்து விரிவாகப் பேசினா்.

இந்தக் கருத்தரங்கில் டிச.23-ஆம் தேதி பொது மருத்துவ தின கொண்டாட்டத்தின் தொடா்ச்சியாக, மூத்த பொது மருத்துவா்கள், அவா்களின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் மருத்துவப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், முதுநிலை மற்றும் மருத்துவ மாணவா்கள் கலந்துகொண்டனா். கருத்தரங்கு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுதா்சன் மற்றும் குழுவினா் செய்திருந்தனா்.