ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பைக்கிலிருந்து விழுந்த உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக்

News image
Updated On :17 ஜனவரி 2026, 12:03 am

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்த உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாலம், பெரியாா் நகா் பகுதியில் வசித்து வந்தவா் ரவிச்சந்திரன்(59), சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு பணி முடிந்து தனது பைக்கில் விருத்தாசலம் நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். வி.குமாரமங்கலம் அருகே வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினராம். இது குறித்து கம்மாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.