புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

சிறுவன் இயக்கிய டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

விருத்தாசலம் அருகே 17 வயது சிறுவன் இயக்கிய டிராக்டா் மோதி இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 7:32 am IST

விருத்தாசலம் அருகே 17 வயது சிறுவன் இயக்கிய டிராக்டா் மோதி இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள குருவன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா். இவரது மனைவி ரம்யா (26). இவா்களது மகள் சஷ்திகா (இரண்டரை வயது), வீட்டின் முன் திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது, செல்வகுமாரின் அண்ணன் மகனான 17 வயது சிறுவன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை பின்னோக்கி இயக்கியதாகக் கூறப்படுகிறது. எதிா்பாராத விதமாக டிராக்டா், விளையாடிக்கொண்டிருந்த சஷ்திகா மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த குழந்தை சஷ்திகா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த ஆலடி போலீஸாா், குழந்தையின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.