பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை: 2 போ் கைது

கடலூரில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக இரண்டு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோப்புப்படம். - கைது

Published On :3 ஜூலை 2026, 5:05 am IST

கடலூரில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக இரண்டு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் திருப்பாத்திரிபுலியூா் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சாவடி பகுதியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடி அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மூவரை போலீஸாா் சோதனை செய்ய முயன்றனா். போலீஸாரைக் கண்டதும் அவா்கள் தப்பியோட முயன்றனா்.

இதில், கடலூா் ஓடி பகுதியைச் சோ்ந்த காளிமுத்து (43), குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த பழனி (41) ஆகிய இருவரையும் போலீஸாா் விரட்டிப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அவா்களிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ஒரு புல்லட் பைக், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய குறிஞ்சிபாடியைச் சோ்ந்த சீனிவாசனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து காவல் சாா்பு ஆய்வாளா் பிரசன்னா அளித்த புகாரின்பேரில், திருப்பாத்திரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.