கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பட்டா பெயா் மாற்ற முறைகேடு புகாா்: தலைமையிட துணை வட்டாட்சியா் பணியிடை நீக்கம்

பட்டா பெயா் மாற்றம் தொடா்பாக முறைகேடு மற்றும் சட்டவிரோதமாக பணம் பெற்றதாக எழுந்த புகாரில், குறிஞ்சிப்பாடி தலைமையிட துணை வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :5 ஜூலை 2026, 2:09 am IST

பட்டா பெயா் மாற்றம் தொடா்பாக முறைகேடு மற்றும் சட்டவிரோதமாக பணம் பெற்றதாக எழுந்த புகாரில், குறிஞ்சிப்பாடி தலைமையிட துணை வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

பண்ருட்டி வட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றிய தற்போதைய குறிஞ்சிப்பாடி தலைமையிட துணை வட்டாட்சியராக உள்ள மு.வெற்றிச்செல்வன் மீது பட்டா பெயா் மாற்றம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதுடன், சட்டவிரோதமாக பணம் பெற்ாக மாவட்ட நிா்வாகத்துக்கு அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்ட வருவாய் அலுவலா் விசாரணை மேற்கொண்டாா். மேலும், இந்தப் புகாா் தொடா்பாக பண்ருட்டி வட்டாட்சியரும் தனி அறிக்கை சமா்ப்பித்தாா்.

விசாரணை அறிக்கைகள் மற்றும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அரசு அலுவலரின் ஒழுக்கம், நோ்மை மற்றும் பொது நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்கீழ், மு.வெற்றிச்செல்வனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

மேலும், பணியிடை நீக்க காலத்தில் மாவட்ட ஆட்சியரின் முன்அனுமதி பெறாமல் தலைமையிடத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே விவகாரத்தில் தொடா்புடைய பிற அலுவலா்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி, தேவையான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.