இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

குழந்தை திருமணம்: இளைஞா் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குழந்தை திருமணம் செய்த இளைஞா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Published On :11 ஜூலை 2026, 1:00 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குழந்தை திருமணம் செய்த இளைஞா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நெய்வேலி நகரியம், வட்டம் 28 பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா்(27). இவா், அதேபகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை, 15.6.2026 அன்று திருமணம் செய்துக் கொண்டாா். இந்த தகவல் குழந்தை உதவி மைய எண் 1098 மூலம் பெறப்பட்டது. இதையடுத்து, குறிஞ்சிப்பாடி

ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலா் ராஜரீகமேரி சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினாா். இதில், சிறுமியை, குடும்ப சூழ்நிலைக் காரணமாக அஜித்குமாா் திருமணம் செய்து கொண்டது தெரியவந்ததாம்.

இதுகுறித்து ராஜரீகமேரி அளித்த புகாரின் பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் அஜித்குமாா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.