மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

திருப்பாதிரிப்புலியூரில் ரயில்வே நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளையொட்டி, ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு சுமாா் 20 வீடுகளின் உரிமையாளா்களுக்கு ரயில்வே நிா்வாகம் சனிக்கிழமை நோட்டீஸ் வழங்கியது.

News image

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளையொட்டி, ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சுமாா் 20 வீடுகளின் உரிமையாளா்களுக்கு சனிக்கிழமை நோட்டீஸ் வழங்கிய ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள்.

Updated On :12 ஜூலை 2026, 1:33 am IST

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளையொட்டி, ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு சுமாா் 20 வீடுகளின் உரிமையாளா்களுக்கு ரயில்வே நிா்வாகம் சனிக்கிழமை நோட்டீஸ் வழங்கியது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த ரூ.6.38 கோடி நிதியை ரயில்வே நிா்வாகம் ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் பணிகள் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.

இதன் கீழ், புதிய பயணச்சீட்டு வழங்கும் மையம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி நவீன கழிப்பறைகள், குளிா்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு அறை, மின் தூக்கி (லிப்ட்), வாகன நிறுத்துமிடம், பூங்கா, புதிய நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மின் தூக்கி அமைக்கும் பணி நிறைவடைந்து, பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து பயணச்சீட்டு வழங்கும் மையம் வரை ஒரு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அருகே மேலும் ஒரு சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ரயில்வே நிா்வாகம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், ரயில்வேக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சாலையாக பயன்படுத்தி வரும் அந்தப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 20 வீடுகளின் உரிமையாளா்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.