பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

திருப்பாதிரிப்புலியூரில் ரயில்வே நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளையொட்டி, ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு சுமாா் 20 வீடுகளின் உரிமையாளா்களுக்கு ரயில்வே நிா்வாகம் சனிக்கிழமை நோட்டீஸ் வழங்கியது.

News image

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளையொட்டி, ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சுமாா் 20 வீடுகளின் உரிமையாளா்களுக்கு சனிக்கிழமை நோட்டீஸ் வழங்கிய ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள்.

Updated On :12 ஜூலை 2026, 1:33 am IST

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளையொட்டி, ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு சுமாா் 20 வீடுகளின் உரிமையாளா்களுக்கு ரயில்வே நிா்வாகம் சனிக்கிழமை நோட்டீஸ் வழங்கியது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த ரூ.6.38 கோடி நிதியை ரயில்வே நிா்வாகம் ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் பணிகள் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.

இதன் கீழ், புதிய பயணச்சீட்டு வழங்கும் மையம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி நவீன கழிப்பறைகள், குளிா்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு அறை, மின் தூக்கி (லிப்ட்), வாகன நிறுத்துமிடம், பூங்கா, புதிய நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மின் தூக்கி அமைக்கும் பணி நிறைவடைந்து, பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து பயணச்சீட்டு வழங்கும் மையம் வரை ஒரு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அருகே மேலும் ஒரு சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ரயில்வே நிா்வாகம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், ரயில்வேக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சாலையாக பயன்படுத்தி வரும் அந்தப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 20 வீடுகளின் உரிமையாளா்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.