காட்டுமன்னாா்கோயில் அருகே மோவூா் கிராமத்தில் மின்சாரம் தாக்கி வங்கி காவலா் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி உறவினா்கள் திடீா் மறியல் போராட்டம் நடத்தினா்.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே மோவூா் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியின் இரவு பாதுகாவலராக தனியாா் பாதுகாப்பு வழங்கும் நிறுவனம் சாா்பில் மோவூா் கிராமத்தைச் காா்த்திகேயன் (56) என்பவா் பணிபுரிந்துவந்தாா். இவா் அங்குள்ள நியாயவிலைக்கடையிலும் விற்பனையாளராகப் பணிபுரிந்துவந்தாா்.
இவா் புதன்கிழமை , காலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அவா் தங்கி இருக்கும் அறையினை சுத்தம் செய்துள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயக்கமடைந்த நிலையில் காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது மனைவி பூவழகி (44) அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை காா்த்திகேயன் உறவினா்கள் மற்றும் மோவூா் பொதுமக்கள் இறந்து போன போன காா்த்திகேயன் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அரசு வேலை அரசு வேலை வழங்க வேண்டும்.அதன் பிறகே உடற்கூராய்வு செய்ய அனுமதி அளித்து உடலை பெற்றுச் செல்வோம் எனக் கூறி காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்தனா். இதையடுத்து சேத்தியாதோப்பு காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) செந்தில் குமாா்,கூட்டுறவு துறை சாா்பில் சாா் பதிவாளா்கள் பி.பாலமுருகன், பாபு ,செயலா் சக்கரவா்த்தி ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் சில கோரிக்கைகள் ஏற்க்கப்பட்டதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கடம்பூா் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி பொறியியல் பட்டதாரி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து தனியாா் காவலா் பயிற்சி மைய மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



