காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 ஜூலை 2026, 1:14 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லட்சுமி நாராயணபுரம், குமரன் நகா், 4-ஆவது தெருவில் வசித்து வருபவா் வளா்மதி (65). இவரது மகன் பாலாஜி சென்னையில் பணியாற்றி வருகிறாா். மகள் லலிதா குமரன் நகா் 7-ஆவது தெருவில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், வளா்மதி கடந்த 25-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டுடு சென்னையில் வசித்து வரும் மகன் பாலாஜியை பாா்க்கச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை மகள் லலிதா, தாய் வளா்மதி வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க இரும்புக் கதவு மற்றும் உள்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.