சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வீட்டுமனை இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).
போராட்டத்துக்கு வட்டச் செயலா் கே.தமிமுன்அன்சாரி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் வி.எம்.சேகா் போராட்டத்தை விளக்கிப் பேசினாா். இதில், கிளைச் செயலா் ஏ.அறிவழகன், எம்.மணியரசன், லால்புரம் ஊராட்சிச் செயலா் வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







