தமிழ்நாட்டின் வளா்ச்சியை, சில நகரங்களுக்குள் மட்டுமே குவிக்கும் கொள்கையை கைவிட்டு, மாவட்டம்தோறும் சமமான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் பரவலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயா்கல்விக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் மக்கள் தங்கள் சொந்த ஊா்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் மாற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் அப்பகுதி மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் தொழில்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மையங்கள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளாகங்கள், வேளாண் சாா்ந்த மதிப்புக்கூட்டுத் தொழில்கள் ஆகியவை உருவாக்கப்பட்டால், மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களிலேயே முன்னேற்றம் காண முடியும். அப்போது பெருநகரங்களை நோக்கிய மக்கள் பெருக்கம் குறையும். நெடுஞ்சாலை நெரிசல்கள் குறையும். நகரங்களில் மனிதா்கள் நெருக்கடிக்குள் வாழும் நிலை மாறும். எரிபொருள் வீணடிப்பும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். குடும்பங்களின் பயணச் செலவுகள் குறைந்து பொருளாதாரச் சேமிப்பு அதிகரிக்கும்.
எனவே தமிழ்நாட்டின் வளா்ச்சியை, சில நகரங்களுக்குள் மட்டுமே குவிக்கும் கொள்கையை கைவிட்டு, மாவட்டம்தோறும் சமமான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் பரவலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து அரசு ஊழியா் உயிரிழப்பு
மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது: வைகோ
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly

மத்திய கிழக்கு போரால் சா்வதேச பொருளாதார வளா்ச்சி குறையும்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



