22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

உண்டியல் திருடிய இருவா் கைது

கடலூா் திருவந்திபுரம் சாலக்கரையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட அருண்குமாா்

Updated On :2 ஜூன் 2026, 5:31 am IST

கடலூா் திருவந்திபுரம் சாலக்கரையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவந்திபுரம் சாலக்கரையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலின் பொறுப்பாளராக அப்பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் உள்ளாா். கடந்த மே 17-ஆம் தேதி காலை கோயிலை திறந்தபோது, அங்கிருந்த உண்டியல் காணாமல் போனது தெரியவந்தது. அடையாளம் தெரியாத நபா்கள் கோயிலுக்குள் புகுந்து உண்டியலைத் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், கடலூா் குமாரப்பேட்டை சாஸ்தா நகரைச் சோ்ந்த அருண்குமாா் (28), காா்த்திகேயன் (36) ஆகியோா் உண்டியலை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட காா்த்திகேயன்

கைது செய்யப்பட்ட காா்த்திகேயன்